அட்வொகட்டா குரலின், தொழிலாளர்கள் தினம் சிறப்பு நிகழ்ச்சியாக, இலங்கையின் முறைசாரா தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அவர்களுக்கான சமூகப் பாதுகாப்பு (Social Protection) குறித்து இக்கலந்துரையாடல் பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் முச்சக்கர வண்டி சாரதிகள் போன்ற பதிவு செய்யப்படாத துறையினருக்கு சமத்துவமின்மை மற்றும் ஊதியச் சுரண்டல் காரணமாக சட்டரீதியான உரிமைகள் எட்டாக்கனியாகவே இருப்பதை இது சுட்டிக்காட்டுகிறது. இலங்கையின் 2022 பொருளாதார நெருக்கடி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேலும் சிதைத்துள்ள நிலையில், அவர்களுக்கு வாழ்வதற்கான ஊதியம் (Living Wage) வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தை காணொளி வலியுறுத்துகிறது. இறுதியில், உழைக்கும் வர்க்கத்தின் மாண்பைப் பாதுகாக்கவும் அவர்களை வறுமையிலிருந்து மீட்கவும் அரசு தனது கொள்கை ரீதியான கட்டமைப்புகளை மறுசீரமைக்க வேண்டுமென இந்த கலந்துரையாடலில் சிறப்பு விருந்தினர்களாக பங்குபற்றிய சமூக அபிவிருத்தி நிறுவகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் முத்துலிங்கம் பெரியசாமி அவர்களும் உழைக்கும் பெண்கள் முன்னணியின் பொது செயலாளர் கி. யோகேஸ்வரி அவர்களும் கூறுகின்றனர். இது தொடர்பாக உங்கள் கருத்து என்ன? உங்கள் காத்திரமான கருத்துக்களை நாங்கள் வரவேற்கின்றோம்.
Like👍 Subscribe🔔 and Share🚀
Look out for other live discussions like this on our social media channels below↓
Facebook- james charles
Facebook - jacob bethell
Instagram -
Instagram -
Twitter -
Twitter -
Tiktok -
Tiktok -
Subscribe to Advocata Institute Youtube channel (
For sally fields more Sinhala related content subscribe to Advocata Plus YouTube channel
